Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஈரோடு அரசன் கண் மருத்துவமனை மற்றும் பள்ளிபாளையம் மத்திய அரிமா சங்கம் சார்பில், இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
பள்ளிபாளையம் மத்திய அரிமா சங்கம் சார்பாக அரிமா தலைவர் ஏ.கே.பழனியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் அரிமா பி.தங்கராஜ், பொருளாளர் எஸ்.தங்கம் துரைசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
இந்த இலவச மருத்துவ முகாமில் கிட்ட பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற பார்வைக் கோளாறு குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் பள்ளிபாளையம் எஸ்பிபி சேரன் அரிமா சங்கம் சார்பாக தலைவர் அரிமா சி.பழனிச்சாமி, பொருளாளர் அரிமா சுதாகர், வட்டாரத் தலைவர் அரிமா டிவி செந்தில் குமார், வட்டார ஒருங்கிணைப்பாளர் அரிமா ஆர்.ரமேஷ், மாவட்ட இணை செயலாளர் அரிமா கே.தனபால், மற்றும் அரிமா உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். முகாமில் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்.